திமுக அரசை கண்டித்து அதிமுக மனிதசங்கிலி

போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் செய்தனர்.

Update: 2024-03-12 08:55 GMT

 போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் செய்தனர்.  

போதைப்பொருள் மாநிலமாக தமிழக மாறிவிட்டதாகவும் கஞ்சா போதையை தடுக்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் அதிமுகவினர் ஈரோடு பஸ்நிலையம் , அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.மேலும் போதை பொருட்கள் தடமாட்டத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சவிதா மருத்துவமனை அருகே நடைபெற்ற அதிமுக ஜெ பேரவை மாநில இணை செயலாளர் வீரக்குமார் தலைமையில் கருப்புசட்டை அணிந்து மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்
Tags:    

Similar News