அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பங்கேற்பு

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட படாளம், கருங்குழி பேரூராட்சி, தொழுபேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டன.

Update: 2024-04-30 03:47 GMT

  மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட படாளம், கருங்குழி பேரூராட்சி, தொழுபேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டன.

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட படாளம், கருங்குழி பேரூராட்சி, தொழுபேடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா், மோா் பந்தல் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு இளநீா், பழவகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதி அதிமுக சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி படாளம் கூட்டுச்சாலை, கருங்குழி பேரூந்து நிறுத்தம், தொழுப்பேடு பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழவகைகளையும், மோா் ஆகியவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் இ.ராஜசேகா் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

Tags:    

Similar News