அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

பனமரத்துப்பட்டியில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம். மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பங்கேற்பு

Update: 2024-02-20 04:59 GMT

 அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

சேலம் அருகே பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய மற்றும் பேரூர் அ.தி.மு.க. சார்பில், நடந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என கூறி தி.மு.க. அரசை கண்டித்தும், 4½ ஆண்டு கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கியும் தெருமுனை பிரசார கூட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். பனமரத்துப்பட்டி பேரூர் செயலாளர் சின்னத்தம்பி வரவேற்று பேசினார். வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து, தலைமை கழக பேச்சாளர் தாராபுரம் முத்துமணிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான ஆர்.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News