அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-05-03 09:23 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் புதூர் மாரியம்மன் கோவில் அருகிலும், புதுப்பாளையம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். சிலை அருகிலும் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.