செய்யாறில் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்யாறு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணிக்குழுவினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-02-27 04:01 GMT

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்யாறு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணிக்குழுவினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்யாறு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணிக்குழுவினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், செய்யாறு சட்டமன்உறுப்பினர் அலுவலகத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருக்கழுக்குன்றம் ஒன்றிக்குழு தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் செய்யாறு தொகுதி பொறுப்பாளர் ஆர் டி அரசு கலந்து கொண்டு 12 பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் தினகரன் J.C.K.சீனிவாசன் மாமண்டூர் ராஜி N சங்கர் , A.மோகனவேல், K.விஸ்வநாதன், C.K.ரவிக்குமார், புரிசை சிவகுமார், திராவிட முருகன், A.ஞானவேல் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News