நெல்லை மாவட்டத்தின் கிராம பகுதிகளில் விவசாயம் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.

Update: 2024-06-01 03:09 GMT

விவசாயிகள் பணிகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து இன்று (மே 31) காலை நிலவரப்படி விவசாயத்திற்காக 206 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. மற்றொரு அணையான மணிமுத்தாறு அணையில் இருந்து 345 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு அணைகளில் நீர் வெளியேற்றத்தால் சீவலப்பேரி, நொச்சிக்குளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாய பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Tags:    

Similar News