வேடந்தாங்கல் அருகே டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

வேடந்தாங்கல் அருகே டீ போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-07 13:54 GMT
டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடந்தாங்கல், தண்டரை பேட்டை, தண்டலம், மோறப்பாக்கம், கழனிபாக்கம், ராமாபுரம், கூடலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

அப்பொழுது கட்சி நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்..வாக்கு சேகரிப்பின் போது ராமாபுரம் பகுதியில் வேட்பாளர் ராஜசேகர் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.. மேலும் முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் கூடலூர் பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பு போது மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்..

Tags:    

Similar News