தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-09 15:43 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதி சித்தாமூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தளூர், பருக்கல், கீழ் மருவத்தூர், மேல்மருவத்தூர், அறப்பேடு, தேன்பாக்கம், மற்றும் 25 கிராமங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் திறந்தவெளி வாகனத்தில் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அனைத்தும் இந்த விடியா தி.மு.க அரசு ஒன்று கூட செயல்படுத்தவில்லை என்ன பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் பேசினார். இந்த நிகழ்ச்சிகளை சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் கிராம பகுதிகளில் வேட்பாளருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மலர் தூவி பூரண கும்ப மரியாதை செய்து சிறப்பான வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News