கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுகவினர் புகார்

தாரமங்கலத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாரமங்கலம் காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

Update: 2023-10-27 02:18 GMT

 புகார் கொடுக்க வந்த அதிமுகவினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூரில் அதிமுக ஆட்சிகாலத்தில் ரிங் ரோடு அமைத்து அந்த திட்டத்திற்கான கல்வெட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிதாவின் பெயர்கள் பொறிக்கப்பட்டு அந்த இடத்தில் நிறுவப்பட்டது. அந்த கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதை அறிந்த அதிமுகவினர் அப்பகுதியில் திரண்டு கல்வெட்டை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
Tags:    

Similar News