திண்டிவனத்தில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

திண்டிவனத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-19 12:18 GMT
திண்டிவனத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, திண்டிவனம் அய் யந்தோப்பு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் வக்கீல் தீன தயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் வடபழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில ஜெ. பேரவை துணை செயலா ளர் பாலசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நகர பொருளாளர் மணிமாறன்,

எம்.ஜி.ஆர்.மன்றம் ரவி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, இளைஞரணி உதயகு மார், கவுன்சிலர்கள் கார்த்தி, சரவணன், திருமகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News