விருப்ப மனுவை வழங்கிய அதிமுக நிர்வாகி !

திருநெல்வேலியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கிய அதிமுக நிர்வாகி.

Update: 2024-02-26 10:25 GMT

அதிமுக நிர்வாகி

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை தலைமை கழகத்தில் அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளர் டாக்டர் தேவா கேப்ரியல் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை இன்று (பிப்.26) சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News