அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிணத்துக்கடவில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.

Update: 2024-03-12 13:32 GMT
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் தாமோதரன் தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சியில் தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதை திமுக அரசு தடுக்க தவறியதாக கூறி  தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கைகளை கோர்த்து படி மனித சங்கிலியாக நின்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  இதில் கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் சிங் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News