அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஜூலை 13ஆம் துவக்கம்

அழகர் கோவில் ஆடிப்பெரும் திருவிழா ஜூலை 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-06-21 10:07 GMT

அழகர் கோவில்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில், நூற்றியெட்டு வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், உலக பிரசித்தி பெற்றதாகவும் விளங்கி வருகின்றது. மேலும் இங்கு நடைபெறும் சித்திரை மாத கள்ளழகர் திருவிழாவும்,

ஆடி மாத தேரோட்டமும் உலக பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்ளும் நிலையில், இந்த ஆண்டிற்கான பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 தொடர்ந்து, 17ஆம் தேதி புதன்கிழமை, ஶ்ரீகள்ளழகர் தங்க பல்லக்கில் சிவகங்கை சமஸ்தான மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும். 20ஆம் தேதி சனிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம். வரும் ஆடிப் பௌர்ணமி ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6: 45 மணியிலிருந்து 07.20 மணிக்குள் வடம் பிடித்து இழுத்து நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை,

அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜைகளும், தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. இதையடுத்து, வரும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன், பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா நிறைபெற உள்ளதாகவும்,

இதனைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளதாகவும், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் துணை ஆணையரான கலைவாணன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News