மது போதையில் தாக்குதல், ஒருவர் பலி

திண்டுக்கல் அருகே மது போதை தகராறில் கூலித் தொழிலாளி பலி. போலீசார் விசாரணை.

Update: 2024-02-17 09:27 GMT

மது போதையில் தாக்குதல், ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஒயின்ஷாப் அருகே மது போதையில் பெத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை மனோஜ் என்பவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார்.சம்பவ இடத்தில் சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. போலீசார் ரோந்து சுற்றிய போதும் கொலைகளை தடுக்க முடியவில்லை. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News