மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மறியல்

செய்யாறில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற அனைத்து தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-16 08:41 GMT

சாலை மறியல் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாஜி பூங்கா முதல் பேருந்து நிலையம் முன்பு வரை ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம், கைத்தறி நெசவாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News