இந்தியா கூட்டணி கட்சி - மாவட்ட ஆலோசனை கூட்டம்

அரியலூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் பங்கேற்று பிப்-08 ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Update: 2024-02-04 05:19 GMT

இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்

இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம், அரியலூர் நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட தலைநகரத்தில் பிப்ரவரி 08 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி , ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என தீர்மானிக்கபட்டது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News