அதிமுக.,வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் நடந்த விழாவில் இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2024-01-31 10:09 GMT

 சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் நடந்த விழாவில் இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரும்,நத்தம் ஒன்றிய குழு தலைவருமான ஆர்.வி.என். கண்ணன் முன்னிலையில் சேர்வீடு மற்றும் துவராபதி பகுதிகளைச் சேர்ந்த வெள்ளைதேவன்,அஜித்குமார் ஆகியோரின் தலைமையில் அந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News