முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

தூமங்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுக.,வில் இணைந்தனர்.

Update: 2024-01-23 09:02 GMT

தூமங்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுக.,வில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில்100 க்கு மேற்பட்ட திமுக மற்றும் மாற்று கட்சியினர் அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் தூமங்குறிச்சியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன், மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் மல்லிகா சின்னதுரை ஆகியோர் தலைமையில் கனகபொம்மன்பட்டி திமுக ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் சிவகுமார் உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் அதிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் பி. தங்கமணி, முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெயவேல் முன்னாள் ஊரட்சி மன்றத் தலைவர் மாதேஷ்வரன், மாதேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News