தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்

நித்திரவிளையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்று கட்சியினர் 50 பேர் இணைந்தனர்.

Update: 2024-03-10 05:58 GMT

கட்சியில் இணைந்தவர்கள் 

குமரி மாவட்டம் நித்திரைவிளையில்  மாற்று கட்சிகளிலிருந்து விலகி 50 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவிற்க்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரனேஷ்குமார் தலைமை தாங்கினார். ராஜ் முன்னிலை வகுத்தார். மாற்று கட்சியினர் 50 க்கு மேற்பட்டோர் மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைத்து கொண்டனர். கிறிஸது ராஜ் அனைவரையும் வரவேற்றார் . சிறப்பு விருந்தினர்களாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரூபின் ஆன்றணி, குளச்சல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அப்துல்லா மற்றும் கிள்ளியூர் தொகுதி நிர்வாகிகள் செலின் ஷீபா, ராஜ்குமார், மணிகண்டன், செல்வரட், எட்வின் ஜெயசிங், பிரேம்லால், ஜாண் லிஸ்தர், சூசை ஆன்றணி, டிக்குனுஸ் கிளிட்டஸ், ஜெகின்ஸ்,ராபின், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News