ஆய்க்குடி அமா் சேவா சங்க புதிய லட்சினை வெளியீடு

அமா் சேவா சங்க புதிய லட்சினை வெளியிட்டுள்ளது.

Update: 2024-05-17 11:01 GMT

புதிய லட்சினை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தின் புதிய லட்சினை (லோகோ) வெளியீட்டு விழா சங்க வளாகத்தில் நடைபெற்றது. இச்சங்கம் தொடங்கப்பட்டு 43 ஆண்டுகள் ஆன நிலையில் லட்சினைமாற்றியமைக்கப்பட்டு நடைபெற்ற விழாவில், அமா் சேவா சங்கத் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், செயலா் எஸ்.சங்கரராமன், செங்கோட்டை தொழிலதிபா் பிரீமியா் ராமன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, டாக்டா் உதுமான், எஸ்.பட்டம்மாள் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

விழாவை அமா் சேவா சங்கத் தலைவா் தொடங்கி வைத்தாா். அமா் சேவா சங்கத்தின் சேவைகள் குறித்து சங்கச் செயலா் உரையாற்றினாா். ஸோகோ நிறுவனத் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீதா் வேம்பு, அமா்சேவா சங்கத்தின் புதிய லட்சினையை காணொலி மூலம் வெளியிட்டாா். 

Tags:    

Similar News