அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளினை முன்னிட்டு புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

Update: 2024-04-15 01:34 GMT

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளினை முன்னிட்டு புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் புத்தகரம் ஊராட்சி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், மாநில சட்டக் கல்லூரி மாணவர்கள அமைப்பாளர் இளமாறன், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த திருவேங்கட ரவி, கண்ணதாசன், பாஸ்போர்ட் சேகர், பிரபாகரன், ராம்கி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜேஷ் கண்ணன், வரதராஜன், வில்லன் ராஜ், காங்கிரஸ் சார்பில் ஜீவா மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News