ஆம்பூர் : தேசிய நெடுஞ்சாலையை கடக்க கடும் அவதி

ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க 2 அடி உயர கம்பி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் கடும் அவதி

Update: 2023-12-10 05:21 GMT

சாலையை கடக்க அவதி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டுமான பணி ஒருவருட காலமாக நடைபெற்று வருகின்றது. ஆம்பூர் ரயில்வே நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க நெடுஞ்சாலை துறையினர் 2 அடி உயரம் கம்பி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.  நெடுஞ்சாலைத் துறையினர் குறுக்கே கம்பியை கொண்டு கட்டியுள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.  நெடுஞ்சாலைத்துறையினர் இரண்டு அடி உயரம் கட்டியுள்ள கம்பியை அகற்றவர்களா?பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News