கரூர் அருகே உடல்நலம் குன்றிய வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கரூர் அருகே உடல்நலம் குன்றிய வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-03-01 12:21 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பொன்னுச்சாமி வயது 44. பொன்னுச்சாமிக்கு கடந்த சில வருடங்களாகவே வயிற்று வலி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 29ஆம் தேதி மதியம் 12.30 மணி அளவில் அவர் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மறவ பாளையம் டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பொன்னுசாமியின் தாயார் பழனியம்மாள் வயது 65 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பொன்னுச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News