இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் காயம்
விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகன மோதிய விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயம்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 11:34 GMT
முதியவர் ஒருவர் காயம் - காவல் துறை வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனி சார்ந்தவர் சங்கரநாராயணன் கணேஷ் நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 19ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில், விருதுநகர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது 45 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், ஒட்டி வந்து சங்கரநாராயணன் கணேஷ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயம் அடைந்த நிலையில், அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சங்கர நாராயண கணேஷ் அளித்த புகாரியின் அடிப்படையில் ஆமத்தூர் காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.