ஜோலார்பேட்டை அருகே முதியவருக்கு திடீர் மாரடைப்பு!

ஜோலார்பேட்டை அருகே டிராக்டர் ஓட்டி வந்த முதியவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பலி.

Update: 2024-02-17 05:12 GMT

 முதியவருக்கு திடீர் மாரடைப்பு

 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பெரிய தம்பி மகன் ராஜா (74) இவருக்கு சொந்தமாக டிராக்டர் உள்ளது இவர் டிராக்டரை எடுத்துக் கொண்டு வாடகைக்காக வேலூர் சென்று கொண்டிருந்தார் . அப்போது ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுச்சக்கரக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவருக்கு திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்த ராஜா அருகே சம்பத் என்பவரது மரக்கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிஷோர் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார். இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவ குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் ஓட்டி வந்த முதியவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News