பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-07-02 08:55 GMT

பைல் படம் 

கும்மிடிப்பூண்டி அருகே வேர்க்காடு கிராமத்தில் வசித்தவர் பழனி, 55. செங்குன்றம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி நோக்கி டூ-- வீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கவரைப்பேட்டையில், நெரிசலான போக்குவரத்துக்கு இடையே சென்றவர், தடுமாறி கிழே விழுந்தார். அப்போது ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு லாரியின் பின் டயரில் சிக்கி உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News