இலக்கியம்பட்டியில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் !

இலக்கியம்பட்டி பகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-09 12:13 GMT

அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் மாம்பழம் சின்னத்தில் மாம்பழம் சேகரித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேசும்போது தருமபுரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது 108 ஆம்புலன்ஸ் வந்தது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு வந்தது பாமக கட்சி தான் என்று பேசினார் .

சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால். காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி அனைத்து ஏரிகளுக்கும் நீர் கொண்டு வந்து விவசாயம் செழிப்படைய பாடுபடுவேன் சிப்காட் பணிகள் தொடங்க பாடுபடுவேன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கு தருவேன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மேம்படுத்த பாடுபடவும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

திமுக தோல்வி அடைய வேண்டும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இளைஞர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Tags:    

Similar News