அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அதிமுக ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-02-03 08:18 GMT

அதிமுக ராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் அனுசரிப்பு.. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கும் அதிமுக ஓன்றிய கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர். இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் A.வேம்புசேகரன், பொருளாளர் P.மகுடீஸ்வரன், மாவட்டஐடிவிங் இணை செயலாளர் அ.விஷ்வா, துணைத் தலைவர் எஸ். சுரேஷ்குமார், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் கணபதி K ராமசாமி, ராதா ,மாணிக்கம், சேகர், ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News