அண்ணா நினைவு நாள் : சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து

பொன்னமராவதி அருகே கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடந்த பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.

Update: 2024-02-04 02:25 GMT

பொது விருந்து 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், பேரறிஞர் அண்ணா  நினைவு நாளினை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சியில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  கலந்துகொண்டார். உடன் பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்
Tags:    

Similar News