பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

ராயனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

Update: 2024-02-16 11:15 GMT

ராயனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா இன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞான ஒளி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கல்வி அலுவலர் மணிவண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேஷ் பாபு, மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், மாரியம்மன் அறக்கட்டளை துணை தலைவர் முருகேசன், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் அவர்தம் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட மாணாக்கர்களுக்கு துணை மேயர் தாரணி சரவணன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Tags:    

Similar News