எலச்சிபாளையம் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

எலச்சிபாளையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பிரச்சனையில் சமூக தேர்வு ஏற்படாததால் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-03-21 12:59 GMT

கிராம மக்கள் 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700 க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகள் ஆக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர். அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த பெரியசாமி என்பவர் மோசடி செய்து சுமார் ஒரு கோடிக்கு மேல் சுருட்டி விட்டதாக தெரிய வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 100 நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் 100 நாட்களுக்குள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரியசாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் 97 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தங்களது பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் எனவும் நாட்கள் கடத்திச் செல்வதால் எந்த பலனும் இல்லை எனவும் பொதுமக்கள் கிருஷ்ணனிடம் உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்கள். 2400 உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பியும் 747 பேர் மட்டுமே நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மீதி உள்ள அனைவரும் நேரில் வந்து வாக்குமூலம் கொடுத்து அவர்களது வாக்குமூலத்தை சரிபார்த்த பின் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என சரக துணை பதிவாளர் கிருஷ்ணன் கூறியதால் கோபமடைந்த விவசாயிகள் சம்மனை பெற்றுக் கொண்டு வாக்குமூலம் கொடுத்த 747 பேருக்கும் கணக்கை விசாரித்து உடனடியாக பணத்தை திருப்பி தர வேண்டுமென வலியுறுத்தினர்.

கோக்கலை பஞ்சாயத்து முழுவதும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் ஆதார் கார்டு ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை மதுரை அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் வங்கி முன்பு சலசலப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் நேரில் வந்து பொதுமக்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Tags:    

Similar News