ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-01-27 06:09 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு அண்ணா சாலை மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா முன்னாள் ஆசிரியர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஆர். சங்கர், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சதாசிவம் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி கவிதா சங்கர், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்பி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கினார். மேலும் அவர் பேசும்போது தமிழக அரசு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகிறது.

கடந்த காலங்களில் இல்லாத பல வாய்ப்புகள் அரசு பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு கிடைக்கிறது இந்த பள்ளியில் பயின்ற பலரும் பல்வேறு மத்திய அரசு பணி மாநில அரசு பணி மற்றும் மருத்துவர்கள் பொறியாளர்களாக உள்ளார்கள். அதற்கு நானே உதாரணம் எனவே மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு வந்தபோது தனக்கு கற்பித்த ஆசிரியர்களை பார்த்தவுடன் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

Tags:    

Similar News