போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவர்களின் பேரணி நடந்தது.

Update: 2024-01-11 05:52 GMT

கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவர்களின் பேரணி நடந்தது. 

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலைப்பயணம் மற்றும் கல்லுாரி மாணவர்களின் பேரணியை கலெக்டர் துவக்கிவைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு, அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் கலைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Tags:    

Similar News