பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-01 07:46 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை வழங்க அறிவித்துள்ளது. கலை, அறிவியல் இலக்கியம் விளையாட்டு மருத்துவம் கல்வி தொழில்நுட்பம் சமூக நலன் பொதுப்பணிகள் தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் செய்தவர்களுக்கு வருகிற 2025 குடியரசு தின விழா ஒன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்தவர்கள் https.awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகிற ஜூன் 28ஆம் தேதிக்குள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரில் அலுவலகத்தில் வழங்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News