தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Update: 2024-02-08 02:28 GMT
தொழிற்பயிற்சி நிலையம்
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு, புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 02.01.2024 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வுக்அ கட்டணம் ரூ.8000/-  செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.02.2024. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம், தொலைபேசி எண் : 044-22501006 (113), 04362-278222,  மின்னஞ்சல் முகவரி detischennai@gmail.com, tnjadtrg2018@gmail.com இல் தெரிந்து கொள்ளலாம்.
Tags:    

Similar News