மேட்டூரில் 100%தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மேட்டூர் அருகே சந்தைதானம் பட்டியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-05-09 14:58 GMT

மாணவர்களுக்கு பாராட்டு

மேட்டூர் அருகே சந்தைதானம் பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 62 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இன்று 100% தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News