பாபநாசத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு விழா

பாபநாசத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2024-05-04 02:54 GMT

பாபநாசத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

பாபநாசம் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற இரும்புத்தலை கிராம உதவியாளர் கோபு உக்கடை கிராம உதவியாளர் உமாராணி ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது மாநில செயலாளர் கார்த்திக் தலைமை வைத்தார்.

இக்கூட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன்,துணை வட்டாட்சியர்கள் பிரியா, அன்புக்கரசி, வட்ட நில அளவையர் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் வரதராஜன் கிராம உதவியாளர் சங்கத்தின் பாபநாசம் வட்ட தலைவர் பாஸ்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி வாசகம் , வட்ட செயலாளர் மனோகர் வட்ட பொருளாளர் மேகநாதன் வட்ட துணைச் செயலாளர்கள் ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டு பாராட்டி பேசினார்கள்.

முடிவில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கோபு, உமாராணி ஏற்புரை வழங்கினார்கள் பட விளக்கம் பாபநாசத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்

Tags:    

Similar News