சேரன் பள்ளியில் முதல் நான்கு இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு

சேரன் பள்ளியில் முதல் நான்கு இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-05-10 11:54 GMT

மாணவர்களுக்கு பாராட்டு 

சேரன் பள்ளியில் முதல் நான்கு இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள், பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்தனர்.

நடந்து முடிந்த பொது தேர்வில் பள்ளியில் மொத்தம் 252 பேர் தேர்வு எழுதி 100% தேர்ச்சியை அடைந்துள்ளனர். பள்ளியில் 494 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த மாணவன் சரஸ் சர்வஜித், 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி உபஸ்ரீ, 492 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவி சோபிகா, 488 மதிப்பெண் பெற்று மாணவன் பாலகுமாரன், மற்றும் மாணவி ரோகினி ஆகியோரை பள்ளியின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று,

அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் பள்ளியின் தாளாளர் பாண்டியன் மற்றும் முதல்வர் பழனியப்பன். பள்ளியிலேயே அதிக மதிப்பெண் எடுக்க காரணமான ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News