திறனறிதல் தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விழுப்புரத்தில் துளிர் திறனறிதல் தேர்வு தொடக்க நிலை மாணவர்களுக்கு நடைபெற்றது.

Update: 2024-03-14 05:59 GMT

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு தொடக்க நிலை மாணவர்களுக்கு நடைபெற்றது. விழுப்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு தொடக்க நிலை (4 மற்றும் 5) மாணவர்களுக்கு, கீழ்ப்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. கோலியனூர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இரவிக்குமார், சிவராமன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் வினாத்தாள் தொகுப்பை அளித்தார்.

அருகில் பள்ளித் தலைமை ஆசிரியர் அமுதா, வானவில் மன்ற கருத்தாளர் செவ்வந்தி ஆகியோர் இருந்தனர். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் இந்துமதி இத்தேர்வை வழிநடத்தினார். மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினார்கள். பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் இது போன்று தேர்வுகள் நடத்துவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்கள். எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியல் பாடத்தை ஐய்யமின்றி கற்பதற்கு இது போன்று தேர்வுகள் நடத்துவது நன்மை தரும் என்ற கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News