அரக்கோணம் புகையிலை பொருள் விற்றவர் கைது!

அரக்கோணம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-06-03 10:47 GMT

காவல்துறை விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை, பஜார் பகுதி, பழனிபேட்டை, வின்டர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஜார் ஜூப்ளி ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 100 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சேகர் (56) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News