வளவனூரில் பகுதி சபா கூட்டம்

வளவனூரில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-11 09:46 GMT
வளவனூரில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் அடுத்த வளவனூர் பேரூராட்சியில் 2-வது வார்டு பாலாஜி நகரில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணா துரை முன்னிலை வகித்தனர் .

வார்டு உறுப்பினர் மகாலட்சுமி வர வேற்றார். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைள் குறித்து பேசினர். பாலாஜி நகரில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும், பாலாஜி நகர் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் குடிநீர்கு ழாய் அமைத்து கொடுத்ததற்கு பேரூராட்சிக்கு நன்றி தெரிவிப்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 2-வது வார்டு பகுதியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை நிலுவையின்றி செலுத்த பொதுமக்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, முடிவில் பகுதி சபா செயலர் அழகு ராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News