மது போதையில் அத்தையை தாக்கிய மருமகன் கைது !
திருவிழாவில் தகராறு. மது போதையில் அத்தையை தகாத வார்த்தை பேசி தாக்கிய மருமகன் கைது.
Update: 2024-03-28 10:24 GMT
திருவிழாவில் தகராறு. மது போதையில் அத்தையை தகாத வார்த்தை பேசி தாக்கிய மருமகன் கைது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா,முன்னூர் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாவாத்தாள் வயது 76. புகலூர் தாலுகா, முன்னூர், கிரஷர் மேடு, கணபதி நகரை சேர்ந்தவர் நாட்ராயன் மகன் சேகர் வயது 48. பாவாத்தாளின் மருமகன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் மார்ச் 11ஆம் தேதி மாலை 7 மணி அளவில், மது போதையில் இருந்த சேகர், கிரசர்மேடு, கணபதி நகர் பிரிவு அருகே நின்று கொண்டு இருந்த பாவாத்தாளிடம் தன்னிச்சையாக சென்று வாய் தகராறில் ஈடுபட்ட சேகர், பின்னர் தகாத செய்கைகளை காட்டி பாவாத்தாளை அவமானப்படுத்தினார். அதன் பின்னரும், தகாத வார்த்தை பேசி, கல் மற்றும் குச்சியால் பாவாத்தாளை தாக்கி, துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாவாத்தாள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையின் முடிவில், சேகரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.