திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது - போலீசாரை பாராட்டிய எஸ்பி

ராஜபாளையத்தில் 59 சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து நகைகளை மீட்ட காவலர்களை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டினார்.

Update: 2024-06-02 05:22 GMT

எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவுடன் போலீசார் 

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜீவ் காந்தி நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி சந்திரசேகர் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 59 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சியைச் சார்ந்த முத்துச்சாமி மற்றும் வெம்பக்கோட்டை சார்ந்த கணேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 59 பவுன் தங்கநகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .

விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி கௌரவித்தார்

Tags:    

Similar News