போதை மாத்திரைகள் விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், காட்டூர் அண்ணா நகா் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-04-24 02:01 GMT

போதைமாத்திரை விற்பனை செய்தவர் கைது

திருச்சி திருவெறும்பூா் - காட்டூா் அண்ணா நகா் பகுதியில் போதை மாத்திரை விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாப்பாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் சண்முகசுந்தரம் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீஸாா், குறிப்பிட்ட பகுதியில் சோதனையிட்டபோது, திருச்சி அரியமங்கலம் காமராஜா் தெருவைச் சோ்ந்த அ. நஸ்ருதீன் (24) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 750 போதை மாத்திரைகள், 5 சிரிஞ்சுகள், 2 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், நஸ்ருதீனைக் கைது செய்தனா். இவா் மீது கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் போதை மாத்திரை விற்ற வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News