ஆசிய யோகா போட்டி காஞ்சி மாணவர் அபாரம்

இந்தியா சார்பில் பங்கேற்ற, காஞ்சிபுரம் சிஷ்ய யோகா மைய மாணவர் 12 வயது பிரிவு போட்டியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்

Update: 2024-06-01 07:40 GMT

கார்த்திக் நாராயணன்

தெற்காசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில், ஆசிய அளவில் 3வது யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம், இலங்கை, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் பங்கேற்றன. இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற, காஞ்சிபுரம் சிஷ்ய யோகா மைய மாணவர் கார்த்திக் நாராயணன், 12 வயது பிரிவு போட்டியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தங்கம் வென்ற கார்த்திக் நாராயணனை, இந்திய துாதரக உறுப்பினர் முத்து, தாய்லாந்து தமிழர் கூட்டமைப்பு செயலர், பயிற்சியாளர் சுதர்சன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Tags:    

Similar News