முன் விரோதத்தில் கொத்தனார் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே முன் விரோதம் காரணமாக கொத்தனாரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-06-10 04:51 GMT

காவல் நிலையம் 

புதுக்கடை அருகே பிலாப்பள்ளி விளையை சேர்ந்தவர் ராஜைய்யன் மகன் ஜஸ்டின் குமார்.இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உடன் பிறந்த சகோதரர்களான சுனில், சதீஷ் குமார் ஆகியோருக்குமிடையே வழிப்பாதை சம்மந்தமான பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் சம்பவத்தன்று ஜஸ்டின் குமார் வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி புகுந்த சுனில், சதீஷ்குமார், சோபியா, சாலினி ஆகியோர் சேர்ந்து ஜஸ்டின் குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ஜஸ்டின் குமார் குழித்துறை அரசு மருத் துவமனையில் அனும திக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் சம்மந்தபட்ட சுனில், சதீஷ்குமார், சோபியா, சாலினி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News