பார்மசி ஊழியர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பார்மசி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நால்வர் மீது வழக்குபதிவு செய்தனர்.

Update: 2024-06-09 06:58 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம், மேலபுத்தேரி யோகேஷ் நகரை சேர்ந்தவர் மகாராஜன் (34) இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பார்மசியில் சமீபத்தில் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் அதே அலுவலகத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்ட இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த தீபக் (27) என்பவரிடம் போன் மூலம் பார்மசியின் பேக், சாம்பிள் மருந்து உள்ளிட்ட பொருட்களை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். இதில் அவர்களிடைய தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் தீபக் மற்றும் கண்டால் தெரியும் நான்கு பேர் சேர்ந்து மகாராஜனின் வீட்டுக்கு சென்று, வீடு புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி, மகாராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக மகாராஜன் வடசேரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீபக் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News