இரவு காவலர்கள் மீது தாக்குதல் : இருவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம், நவம்பட்டி அருகே டாஸ்மாக் இரவு காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-22 11:40 GMT

தாக்குதல் 

இலுப்பூர் அருகே நவம்பட்டி டாஸ்மாக் கடையில் இரவு காவலராக சண்முகம் மற்றும் பழனி ஆகியோர் உள்ளனர்.நேற்று ஒரு காரில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர் இரவு காவலர்களிடம் மது பானத்தை எடுத்துதர கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கடை அடைக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளனர்.

இதற்கு 3 பேரும் சேர்ந்து இரவு காவலர்கள் சண்முகம் மற்றும் பழனியை ஆகியோரை தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News