பெண்களை தாக்கியவர் கைது

நரிக்குறவ பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-06 05:34 GMT

காவல் நிலையம்

உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் கலா. இவர் வீட்டின் அருகே இட்லி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அன்னை தெரசா நகர் நரிக்குறவர் குடிசை பகுதியைச் சேர்ந்த ரவி மனைவி லட்சுமி, 35; ஸ்ரீதேவி உள்ளிட்ட சிலர் சாப்பிட்டனர். சாப்பிட்ட இலையை அருகே உள்ள இடத்தில் போட சென்றபோது, அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த அன்பழகன், 58; நரிக்குறவர்களிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி, பிரம்பால் தாக்கியுள்ளார். உளுந்துார்பேட்டை போலீசார் அன்பழகனை கைது செய்தனர்.
Tags:    

Similar News