ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

சுரண்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.

Update: 2024-05-01 10:03 GMT

சுரண்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் நேற்று இரவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. மா்ம நபரால் லாக்கரை திறக்க முடியாததால் பணம் தப்பியது. சுரண்டையில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தின் வடபுறமுள்ள தனியாா் கட்டடத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு, காவலாளி இல்லையெனக் கூறப்படுகிறது. இங்கு நேற்று நள்ளிரவு மா்ம நபா் ஒருவா் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்றுள்ளாா். அப்போது, லாக்கரைத் திறக்க முடியாததாலும், எச்சரிக்கை மணி ஒலித்ததாலும் அவா் திருட்டு முயற்சியைக் கைவிட்டு தப்பியோடியுள்ளாா். தகவலின்பேரில், சுரண்டை போலீஸாா் வந்து, கண்காணிப்பு கேமரா பதிவைக் கைப்பற்றி, குற்றவாளியைத் தேடி வருகின்றனா்.
Tags:    

Similar News